Sunday, November 26, 2017


இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து அவற்றை தடுப்பதற்கான கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகளை இலக்காகக் கொண்டு பிரஜைகள் சமாதான சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு-ஹெவ்லொக் டவுணில் இன்று காலை இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கலாநிதி எஸ்.எல். றியாஸ் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது பொலிசார் மற்றும் நடுநிலை பௌத்த மக்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது, முஸ்லிம் கிராமங்களின் தகவல்களை திரட்டுவது, சக வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்பன தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் நடைபெற்றன.


இதனையடுத்து இந்த முயற்சியை அமைப்பு ரீதியாக முன்னெடுப்பதற்கு "பிரஜைகள் சமாதான சபை" அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன்
தலைவராக
கலாநிதி எஸ் .எல். றியாஸ்
(0774056741)

இணைச் செயலாளர்களாக
எம்.எச்.எம். நியாஸ் 
(0777814108)
அன்வர் மனதுங்க
(0769197112)

பொருளாளராக
கொலன்னாவை ஸபார் அஹமத்
(0778195139)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி
எம்.ஜே. அப்துல் ஜப்பார் (0777575162)

பிரதி தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி நாகூர் ரஹீம்
(0773573514)
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உபதலைவர்களாக
ஏ. எம். அஸீஸ்
(0777-313275),
எம்.எச்.எம்.பவாஸ்
(0714838896)

ஊடகப் பணிப்பாளராக
ஐ.ஏ. கலீல் ரஹ்மான்
(0777791770)

ஊடகப் பிரதிப் பணிப்பாளராக
கியாஸ் ஏ புகாரி
(0774010238)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக
மல்வானை ஹஸன்
(0778132705)
பெரீஸ் எம் பாறூக் 
(077 5577832)
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அமைப்பின் ஏற்பாட்டாளராக ஐக்கிய முஸ்லிம் பேரவையின் தலைவர் ஆர்.எப். அஷ்ரப் அலீ செயற்படுகின்றார்.

எதிர்வரும் வாரம் இக்குழுவினர் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட தரப்பை சந்தித்து இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.

மேலும் விரைவில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தின் போது மேலும் பலர் இதன் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜைகள் சமாதான சபை - அங்குரார்ப்பணம்


இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து அவற்றை தடுப்பதற்கான கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகளை இலக்காகக் கொண்டு பிரஜைகள் சமாதான சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு-ஹெவ்லொக் டவுணில் இன்று காலை இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கலாநிதி எஸ்.எல். றியாஸ் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது பொலிசார் மற்றும் நடுநிலை பௌத்த மக்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது, முஸ்லிம் கிராமங்களின் தகவல்களை திரட்டுவது, சக வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பது என்பன தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் நடைபெற்றன.


இதனையடுத்து இந்த முயற்சியை அமைப்பு ரீதியாக முன்னெடுப்பதற்கு "பிரஜைகள் சமாதான சபை" அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன்
தலைவராக
கலாநிதி எஸ் .எல். றியாஸ்
(0774056741)

இணைச் செயலாளர்களாக
எம்.எச்.எம். நியாஸ் 
(0777814108)
அன்வர் மனதுங்க
(0769197112)

பொருளாளராக
கொலன்னாவை ஸபார் அஹமத்
(0778195139)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி
எம்.ஜே. அப்துல் ஜப்பார் (0777575162)

பிரதி தேசிய அமைப்பாளராக
அல்ஹாஜ் மௌலவி நாகூர் ரஹீம்
(0773573514)
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உபதலைவர்களாக
ஏ. எம். அஸீஸ்
(0777-313275),
எம்.எச்.எம்.பவாஸ்
(0714838896)

ஊடகப் பணிப்பாளராக
ஐ.ஏ. கலீல் ரஹ்மான்
(0777791770)

ஊடகப் பிரதிப் பணிப்பாளராக
கியாஸ் ஏ புகாரி
(0774010238)
ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக
மல்வானை ஹஸன்
(0778132705)
பெரீஸ் எம் பாறூக் 
(077 5577832)
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அமைப்பின் ஏற்பாட்டாளராக ஐக்கிய முஸ்லிம் பேரவையின் தலைவர் ஆர்.எப். அஷ்ரப் அலீ செயற்படுகின்றார்.

எதிர்வரும் வாரம் இக்குழுவினர் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட தரப்பை சந்தித்து இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.

மேலும் விரைவில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தின் போது மேலும் பலர் இதன் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 3, 2017



தக்க தருணத்தில் உங்களுடைய முயற்சி இன்றியமையாதது.

20ஆவது திருத்த சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் ஆயுட் காலத்தை நீட்டுவதற்கும்  வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கும் இருக்கின்ற தொடர்பு சம்பந்தமாக தமிழ் பேசுகின்ற அனைத்து மக்களும் புரியக்கூடிய வகையில் -அதற்கென்றே போடப்பட்ட சம்மாந்துறை மேடையின் ஊடாக காத்திரமாக பங்களிப்பின் மூலம் உரையாற்றக்கிடைத்தது.  அல்ஹம்துலில்லாஹ்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் என்னுடைய கூற்றினை ஒப்புக்கொண்டு, சமஷ்டி தொடர்பான விடயங்களையும் வடக்கு கிழக்கு இணைக்கின்ற நிபந்தனைகள் போன்றவற்றை  முன்வைத்தே 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்ததை ஒப்புக்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ளக்கூடியவாறு 13.09.2017 அன்று இது தொடர்பாக என்னுடையதும் கிழக்கு மக்களினுடையதும் விசணத்தை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டியிருந்தேன்.

கைமேல் பலனாக நமது மக்கள் உண்மையினைப் புரிந்து விழித்துவிட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

கிழக்கு வடக்கோடு இணைக்கப்படும் அல்லது முயற்சிக்கப்படுகிறது என்றவாறான பேச்சுக்களைக் கேட்கின்ற பொழுது கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டுமொருமுறை தாங்கள் அனுபவித்த வரலாற்றுத் துன்பங்களை நினைவூட்டியவர்களாக இது தொடர்பாக கருத்து வெளியிடும் ஈனத்தனமானவர்களை வெறுத்தொதுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பல இயக்கங்களும் ஊடகங்களும் காத்திரமான தங்களுடைய பங்களிப்புகளை அளிக்க, அவை கண்டு நிம்மதிப் பெருமூச்சு உருவெடுத்தது. குறிப்பாக,சமூகத்தை விழிப்பூட்டுவதற்கும் அறிவுறுத்துவதற்குமான சமூகப்பணியில் "கிழக்கு நமதே" உடன்பிறப்புகள் வரலாற்றில் பேசப்படட்டும்.

கிழக்கின் என் மக்கள் இன,குல பாகுபாடுகளுக்கப்பாலும்,அரசியல் வேறுபாடுகளை மறந்தும் ஒன்றிணைந்து இவர்களுடைய முயற்சிக்கு பேராதரவு வழங்க வேண்டும்.

அல்-ஹாஜ் A.L.M அதாஉல்லா
தலைவர்
தேசிய காங்கிரஸ்

''கிழக்கு நமதே'' - என் உடன்பிறப்புகளுக்கு வரலாற்று வாழ்த்துக்களும் நன்றிகளும்



தக்க தருணத்தில் உங்களுடைய முயற்சி இன்றியமையாதது.

20ஆவது திருத்த சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் ஆயுட் காலத்தை நீட்டுவதற்கும்  வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கும் இருக்கின்ற தொடர்பு சம்பந்தமாக தமிழ் பேசுகின்ற அனைத்து மக்களும் புரியக்கூடிய வகையில் -அதற்கென்றே போடப்பட்ட சம்மாந்துறை மேடையின் ஊடாக காத்திரமாக பங்களிப்பின் மூலம் உரையாற்றக்கிடைத்தது.  அல்ஹம்துலில்லாஹ்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் என்னுடைய கூற்றினை ஒப்புக்கொண்டு, சமஷ்டி தொடர்பான விடயங்களையும் வடக்கு கிழக்கு இணைக்கின்ற நிபந்தனைகள் போன்றவற்றை  முன்வைத்தே 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்ததை ஒப்புக்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ளக்கூடியவாறு 13.09.2017 அன்று இது தொடர்பாக என்னுடையதும் கிழக்கு மக்களினுடையதும் விசணத்தை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டியிருந்தேன்.

கைமேல் பலனாக நமது மக்கள் உண்மையினைப் புரிந்து விழித்துவிட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

கிழக்கு வடக்கோடு இணைக்கப்படும் அல்லது முயற்சிக்கப்படுகிறது என்றவாறான பேச்சுக்களைக் கேட்கின்ற பொழுது கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டுமொருமுறை தாங்கள் அனுபவித்த வரலாற்றுத் துன்பங்களை நினைவூட்டியவர்களாக இது தொடர்பாக கருத்து வெளியிடும் ஈனத்தனமானவர்களை வெறுத்தொதுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பல இயக்கங்களும் ஊடகங்களும் காத்திரமான தங்களுடைய பங்களிப்புகளை அளிக்க, அவை கண்டு நிம்மதிப் பெருமூச்சு உருவெடுத்தது. குறிப்பாக,சமூகத்தை விழிப்பூட்டுவதற்கும் அறிவுறுத்துவதற்குமான சமூகப்பணியில் "கிழக்கு நமதே" உடன்பிறப்புகள் வரலாற்றில் பேசப்படட்டும்.

கிழக்கின் என் மக்கள் இன,குல பாகுபாடுகளுக்கப்பாலும்,அரசியல் வேறுபாடுகளை மறந்தும் ஒன்றிணைந்து இவர்களுடைய முயற்சிக்கு பேராதரவு வழங்க வேண்டும்.

அல்-ஹாஜ் A.L.M அதாஉல்லா
தலைவர்
தேசிய காங்கிரஸ்

Monday, October 30, 2017

அல்ஹம்துலில்லாஹ்
(அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்)

பாலமுனைப் பிரகடனம்
(29-10-2017)


முன்னால் அமைச்சர் அதாவுல்லாவின் ஆயுளை இறைவன் அல்லாஹ் நீடிக்கச் செய்வானாக
ஆமீன்

சமூகத்தில் பல திசைகளாலும் முஸ்லிம்களுக்கு அநீதி செய்து சட்டங்கள் அமுல் ்செய்யப்படும் இக்காலத்தில் அல்லாஹ்வின் அருளால் அதாவுள்ளாவின் சிந்தனையில் உதித்த பாலமுனைப் பிரகடணம் எம்  சமூக விடுதலை தலைவன் மர்ஹீம் அஸ்ரபின்  சிந்தனையை ஒப்பாக கொண்டதாக இருந்தது
அல்ஹம்துலில்லாஹ்

முன்னால் அமைச்சர் அதாவுல்லாவை அல்லது அவரது சிந்தனைைய அங்கிகரித்து பிரகடணத்தில் பங்காலியான அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் இங்கணம் ஜஸாகல்லாஹீகைரா

யாஅல்லாஹ் பாலமுனைப் பிரகடனத்தில் முன்மொழியப்பட்ட பிரேரனைகளின் பாதகம் சாதகம் அறிந்தவன் நீயே உன்னை தொழும் அடிமைகளுக்கு சாதகமான அனைத்தயையும் நிறைவேற்ற இந்த பிரகடணம் போதுமானதா்க்குவாயாக ஆமீன்


பாலமுனைப் பிரகடன முன்மொழிவு
29-10-2017

தேசிய காங்கிரசின் பாலமுனைப் பிரகடனம்
சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் நமது நாட்டின் அரசியல் யாப்பு பலமுறை திருத்தப்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டும் வந்திருக்கிறது. அந்த சந்தர்ப்பங்களின் போது இருந்த அரசியல் தலைமைகளும் அவர்களை வழிப்படுத்திய வெளிச்சக்திகளும் இந்நாட்டு மக்கள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதற்காக அல்லாமல் தங்களின் சொந்த நலன்களுக்கான மாற்றங்களையே மேற்கொண்டனர்.
அவை நமக்கு தொடர் துயரங்களையே தந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் இன சமத்துவம் அதிகாரப் பகிர்வு போன்றவைகள் வழங்குவதாக மக்களிடம் வாக்;குப்பெற்ற நல்லாட்சி- குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவுள்ள பாரளுமன்றம், அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கென நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழு 2017 செப்டம்பர் 21ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கை மூன்று இனங்களும் மனம் ஒருமித்து சேர்ந்து பேசாமல் முன்மொழியப்பட்டுள்ளதால் நமது நாட்டில் வாழும்; மூவின மக்களும் எப்போதும் சந்தோசமாக ஒனறுபட்டு வாழ வழிசெய்துள்ளதாக எந்தப் பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.



இந்நிலையில்
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மக்களின் இறைமை என்பவற்றில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாலும்
ஜனாதிபதியை நேரடியாகத் தமது வாக்குகளின் மூலம் தெரிவுசெய்வதற்கான மக்களின் உரிமை இல்லாதொழிக்கப்பட்டு நாட்டின் தலைவர் மக்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கவேண்டும் என்ற நிலைமை மாற்றப்பட்டு நாட்டில் சுயாதீனமான தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் உருவாக்கப்படுவதாலும்
ஓற்றையாட்சி என்பது மாற்றப்பட்டு ஒருமித்;த நாடு என்ற பெயரில் சமஷ்டி அதிகாரம் வழங்க மறைசூழ்ச்சி செய்யப்படுவதாலும்
வெளிச் சக்திகளின் நவ காலணித்துவத்திற்கு சாதகமான தன்மைகளைக் கொண்டுள்ளதாலும்
புறச்சக்திகளின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்களுக்குள்ளாகி முன்வைக்கப்படுகிறது என்பதாலும்
சுதேச மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யவில்லை என்பதாலும்
விகிதாசார தேர்தல் முiறையை மாற்றியமைப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானது என்பதாலும்

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கமுற்படுவதாலும்
இந்தியாவின் அழுத்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை நமது நாட்டில் தோல்வியுற்றிருப்பதை நாம் உணர்வதாலும்
இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் எப்போதும் சுதந்திரமாக அன்பு பரிமாற்றங்களுடன் வாழவேண்டும் என நாம் விரும்புவதாலும்





தீர்மானம்-01

தேசிய காங்;கிரசின் இம்மக்கள் பேரணி அரசியலமைப்;பு நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கத் தீர்மானிக்கிறது.

தீர்மானம்-02

ஆதலால் அரசாங்கத்தினால் இடைக்கால அறிக்கை மீளப்பெறப்படவேண்டும் எனவும் அது எவ்வழியிலும் சட்டமாக்கப்படக்கூடாது எனவும் தேசிய காங்கிரசின் இம்மக்கள் பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமை ஒன்றை கருத்தில்கொண்டு நமது நாட்டின்; மூவினத்தினதும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்துபேசி தற்போதைய நமது அரசியல் யாப்பில்; சில திருத்தங்களை மாத்திரம் செய்து அதனை சாத்தியப்படுத்த முடியும் என இப்பேரணி எடுத்தியம்புகிறது.

தீர்மானம்-03

புதிய திருத்தங்களாக பின்வரும் விடயங்களும் பரிசீலிக்கப்படவேண்டும் என இப்பேரணி முன்மொழிகிறது

1. இன மத மொழி நல்லிணக்கம் தொடர்பான விஷேட ஏற்பாடுகள்

2. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைகளும் பாரபட்சமாக கருதப்படலாகாது

3. சிறுபான்மை மக்களுக்கு ஆகக் குறைந்தது மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலான காணி உள்;ளிட்ட வளப் பகிர்வு

4. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற தற்போதைய ஏறற்பாடுகளுக்கு மேலதிகமாக சகல நிர்வாக மட்டங்களிலுமுள்ள இன மத மொழி பரம்பல் விகிதாசரத்திற்கு அமைவாக அங்குள்ள பெரும்பான்மைக்கு அவ்வந்த மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுதல்

5. இனங்களுக்கிடையிலான குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்

6. சட்டங்களின் நீதிமுறை மீளாய்வு

7. பொதுநல அக்கறை வழக்காடலுரிமை

8. மாகாண சபை முறைமை நீக்கம்

9. அதிகாரம் மக்களுக்கு அருகில் கொண்டுவரப்பட்டு உள்ளுராட்சி அதிகார சபைகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் காணி சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் உள்ளுராட்சி அதிகார சபைகளின் இணக்கங்களோடு அமுல்படுத்தப்படுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குதல்.

10. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்படக்கூடாது.

தீர்மானம்-04

மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக எமது மக்களின் உடனடி பிரச்சினையாகவுள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்ற முறைமைக்கு புறம்;பாக நிறைவேற்றப்பட்டதாலும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லையாதலாலும் அந்த சட்டத்தை அரசு இரத்துச்வேண்டும் எனவும் இம்மக்கள்பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

தீர்மானம்-05

சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றபிரதிநிதிகள் மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படவேண்டும் என இம்மக்கள் பேரணி அவர்களை வலியுறுத்துகிறது.

இப்பிரகடனம் 2017.10.29ம்திகதி ஞாயிற்றுக்கிழமை
பிpற்கல் வேளையில் அம்பாரை  மாவட்டம் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்றுசேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களினால் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்டு ஏகோபித்து நிறைவேற்றப்பட்டதாகும்.

் பாலமுனை பிரகடனம் வெற்றிகரமாக நிறைவேறியது: பெருந்திரலானோர் பங்கேற்புடன்அல்ஹம்துலில்லாஹ்
(அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்)




தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரகடனம்

அல்ஹம்துலில்லாஹ்
(அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்)

பாலமுனைப் பிரகடனம்
(29-10-2017)


முன்னால் அமைச்சர் அதாவுல்லாவின் ஆயுளை இறைவன் அல்லாஹ் நீடிக்கச் செய்வானாக
ஆமீன்

சமூகத்தில் பல திசைகளாலும் முஸ்லிம்களுக்கு அநீதி செய்து சட்டங்கள் அமுல் ்செய்யப்படும் இக்காலத்தில் அல்லாஹ்வின் அருளால் அதாவுள்ளாவின் சிந்தனையில் உதித்த பாலமுனைப் பிரகடணம் எம்  சமூக விடுதலை தலைவன் மர்ஹீம் அஸ்ரபின்  சிந்தனையை ஒப்பாக கொண்டதாக இருந்தது
அல்ஹம்துலில்லாஹ்

முன்னால் அமைச்சர் அதாவுல்லாவை அல்லது அவரது சிந்தனைைய அங்கிகரித்து பிரகடணத்தில் பங்காலியான அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் இங்கணம் ஜஸாகல்லாஹீகைரா

யாஅல்லாஹ் பாலமுனைப் பிரகடனத்தில் முன்மொழியப்பட்ட பிரேரனைகளின் பாதகம் சாதகம் அறிந்தவன் நீயே உன்னை தொழும் அடிமைகளுக்கு சாதகமான அனைத்தயையும் நிறைவேற்ற இந்த பிரகடணம் போதுமானதா்க்குவாயாக ஆமீன்


பாலமுனைப் பிரகடன முன்மொழிவு
29-10-2017

தேசிய காங்கிரசின் பாலமுனைப் பிரகடனம்
சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் நமது நாட்டின் அரசியல் யாப்பு பலமுறை திருத்தப்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டும் வந்திருக்கிறது. அந்த சந்தர்ப்பங்களின் போது இருந்த அரசியல் தலைமைகளும் அவர்களை வழிப்படுத்திய வெளிச்சக்திகளும் இந்நாட்டு மக்கள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதற்காக அல்லாமல் தங்களின் சொந்த நலன்களுக்கான மாற்றங்களையே மேற்கொண்டனர்.
அவை நமக்கு தொடர் துயரங்களையே தந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் இன சமத்துவம் அதிகாரப் பகிர்வு போன்றவைகள் வழங்குவதாக மக்களிடம் வாக்;குப்பெற்ற நல்லாட்சி- குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவுள்ள பாரளுமன்றம், அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கென நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழு 2017 செப்டம்பர் 21ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கை மூன்று இனங்களும் மனம் ஒருமித்து சேர்ந்து பேசாமல் முன்மொழியப்பட்டுள்ளதால் நமது நாட்டில் வாழும்; மூவின மக்களும் எப்போதும் சந்தோசமாக ஒனறுபட்டு வாழ வழிசெய்துள்ளதாக எந்தப் பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.



இந்நிலையில்
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மக்களின் இறைமை என்பவற்றில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாலும்
ஜனாதிபதியை நேரடியாகத் தமது வாக்குகளின் மூலம் தெரிவுசெய்வதற்கான மக்களின் உரிமை இல்லாதொழிக்கப்பட்டு நாட்டின் தலைவர் மக்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கவேண்டும் என்ற நிலைமை மாற்றப்பட்டு நாட்டில் சுயாதீனமான தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் உருவாக்கப்படுவதாலும்
ஓற்றையாட்சி என்பது மாற்றப்பட்டு ஒருமித்;த நாடு என்ற பெயரில் சமஷ்டி அதிகாரம் வழங்க மறைசூழ்ச்சி செய்யப்படுவதாலும்
வெளிச் சக்திகளின் நவ காலணித்துவத்திற்கு சாதகமான தன்மைகளைக் கொண்டுள்ளதாலும்
புறச்சக்திகளின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்களுக்குள்ளாகி முன்வைக்கப்படுகிறது என்பதாலும்
சுதேச மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யவில்லை என்பதாலும்
விகிதாசார தேர்தல் முiறையை மாற்றியமைப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானது என்பதாலும்

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கமுற்படுவதாலும்
இந்தியாவின் அழுத்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை நமது நாட்டில் தோல்வியுற்றிருப்பதை நாம் உணர்வதாலும்
இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் எப்போதும் சுதந்திரமாக அன்பு பரிமாற்றங்களுடன் வாழவேண்டும் என நாம் விரும்புவதாலும்





தீர்மானம்-01

தேசிய காங்;கிரசின் இம்மக்கள் பேரணி அரசியலமைப்;பு நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கத் தீர்மானிக்கிறது.

தீர்மானம்-02

ஆதலால் அரசாங்கத்தினால் இடைக்கால அறிக்கை மீளப்பெறப்படவேண்டும் எனவும் அது எவ்வழியிலும் சட்டமாக்கப்படக்கூடாது எனவும் தேசிய காங்கிரசின் இம்மக்கள் பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமை ஒன்றை கருத்தில்கொண்டு நமது நாட்டின்; மூவினத்தினதும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்துபேசி தற்போதைய நமது அரசியல் யாப்பில்; சில திருத்தங்களை மாத்திரம் செய்து அதனை சாத்தியப்படுத்த முடியும் என இப்பேரணி எடுத்தியம்புகிறது.

தீர்மானம்-03

புதிய திருத்தங்களாக பின்வரும் விடயங்களும் பரிசீலிக்கப்படவேண்டும் என இப்பேரணி முன்மொழிகிறது

1. இன மத மொழி நல்லிணக்கம் தொடர்பான விஷேட ஏற்பாடுகள்

2. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைகளும் பாரபட்சமாக கருதப்படலாகாது

3. சிறுபான்மை மக்களுக்கு ஆகக் குறைந்தது மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலான காணி உள்;ளிட்ட வளப் பகிர்வு

4. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற தற்போதைய ஏறற்பாடுகளுக்கு மேலதிகமாக சகல நிர்வாக மட்டங்களிலுமுள்ள இன மத மொழி பரம்பல் விகிதாசரத்திற்கு அமைவாக அங்குள்ள பெரும்பான்மைக்கு அவ்வந்த மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுதல்

5. இனங்களுக்கிடையிலான குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்

6. சட்டங்களின் நீதிமுறை மீளாய்வு

7. பொதுநல அக்கறை வழக்காடலுரிமை

8. மாகாண சபை முறைமை நீக்கம்

9. அதிகாரம் மக்களுக்கு அருகில் கொண்டுவரப்பட்டு உள்ளுராட்சி அதிகார சபைகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் காணி சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் உள்ளுராட்சி அதிகார சபைகளின் இணக்கங்களோடு அமுல்படுத்தப்படுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குதல்.

10. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்படக்கூடாது.

தீர்மானம்-04

மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக எமது மக்களின் உடனடி பிரச்சினையாகவுள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்ற முறைமைக்கு புறம்;பாக நிறைவேற்றப்பட்டதாலும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லையாதலாலும் அந்த சட்டத்தை அரசு இரத்துச்வேண்டும் எனவும் இம்மக்கள்பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

தீர்மானம்-05

சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றபிரதிநிதிகள் மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படவேண்டும் என இம்மக்கள் பேரணி அவர்களை வலியுறுத்துகிறது.

இப்பிரகடனம் 2017.10.29ம்திகதி ஞாயிற்றுக்கிழமை
பிpற்கல் வேளையில் அம்பாரை  மாவட்டம் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்றுசேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களினால் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்டு ஏகோபித்து நிறைவேற்றப்பட்டதாகும்.

் பாலமுனை பிரகடனம் வெற்றிகரமாக நிறைவேறியது: பெருந்திரலானோர் பங்கேற்புடன்அல்ஹம்துலில்லாஹ்
(அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்)




Monday, October 23, 2017

எனது கேள்விக்கு பதில் தரமுடியுமா?


மாநகர சபை தேர்தலில் போட்டியிடுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி போட்டியிட்டால் எனது ஆதரவாளர்களை தடபுடலாக கவணிக்கவேண்டும், போஸ்டர்கள், நோடீஸ் என்று எக்கசக்க செலவுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து லட்சமாவது செலவாகும் என்று வைத்துக்கொள்வோம்.

தேர்தலில் தோல்வியடைந்தால் தலையிலே துண்டைப்போட்டுக் கொண்டு படுத்து விடலாம், (அதன் பிறகு குடும்பத்துக்குள் மஃரம் ஒழும்பும் அதுவேற)

இப்படி செலவு செய்து வெற்றியடைந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், நான் செலவு செய்த காசை லாபத்தோடு அரவிடவேண்டும் அல்லவா? அதனை எப்படி பெறலாம் என்று கூறுங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலாக (அது, இது) செய்து உழைக்கலாம் என்று பதில் கூறுகின்றார்கள்.

அப்படியென்றால் பொதுச்சொத்தை கொள்ளையடித்துத்தானே அந்த பணத்தை சம்பாதிக்கவேண்டும். அப்படியென்றால் அது கராம்தானே என்று கேட்டால்,  அதற்கு பதில்  உங்களுக்கு ஒன்றும் தெறியாது அரப்படிச்ச கதை கதைக்கின்றீர்கள் என்று கூறுகின்றார்கள். அது ஏன் என்றுதான் புரியவில்லை.

நான் சமூகத்துக்காக பேசவேண்டும், போராடவேண்டும் என்றால், பொதுமக்கள்தானே எம்மை வெற்றியடைய வைக்கவேண்டும். அதற்கு நான் ஏன் பணம் செலவு செய்யவேண்டும்?

எனது காலத்தையும், நேரத்தையும், எனது தொழிலையும் ஓரம் கட்டிவிட்டு இவர்களுக்காக பாடுபட நான் ஏன் இவர்களுக்கு பணம் செலவு செய்யவேண்டும்?

அந்த பணத்தை லாபத்தோடு திரும்ப பெறுவதற்கு, பொதுமக்களின்  சொத்தை  நான் ஏன் சுரண்ட வேண்டும்?

அப்படி கொள்ளையடிக்கும் பணத்தில் வாழ்ந்தால் இறைவன் அதற்கு பரக்கத் செய்வானா?

இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, பணத்தையும்  செலவு செய்துகொண்டு,  எனக்கு வாக்களியுங்கள் என்று வீடுவீடாக சென்று கெஞ்சுவது ஏன்?

இவர்கள் வீடுவீடாக அழைவது மக்களுக்கு சேவை செய்யவா? அல்லது பதவிக்காகவா? அல்லது கொள்ளையடிக்கவா? என்று புரியவில்லையே..!

ஒரு பள்ளிவாசலில் தலைவராக இருங்கள் அல்லது, எங்களுக்காக பாடுபட தேர்தலில் போட்டியிடுங்கள் என்று மக்கள்தானே எங்களை இனம் கண்டு கெஞ்சி கூத்தாடி அந்த இடத்துக்கு அனுப்பவேண்டும்.

அதற்கு அப்புரம்தான், நாம் என்ன செய்வது மக்கள் விடுவதாக தெறியவில்லை, காலத்தையும், நேரத்தையும் ஒதுக்கி மக்களுக்காக போராடுவோம் என்று நினைத்து செல்பவன்தானே உண்மையில் மக்களுக்காக போராடுவான்.

அவன் அங்கே சென்று மக்களுக்காக பாடுபடுவானா அல்லது விட்ட பணத்தை எப்படி எடுக்கலாம் என்று வழிதேடுவானா? 
(பதவியை கேட்டுத் தெறிபவனுக்கு பதவியை கொடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சும்மாவா சொன்னார்கள்).

அப்படி பதவியை கேட்டு அழைந்து தெறிபவன்தான் உண்மையான சமூகத்தின் எதிரி என்பதை நமது சமூகம் ஏன்தான் புரியமறுக்கின்றதோ தெறியாது?

ஒரு செலவும் செய்யாமல், மக்களாகவே இனம்கண்டு ஒருவரை தேர்ந்தெடுத்து அனுப்புவார்களாக இருந்தால் அவன்தானே   உண்மையான மக்களின் பிரதிநிதி?

(இதனை உங்களின் சிந்தனைக்காகத்தான் எழுதினேன் வேறு நோக்கம் ஒன்றும் இல்லை)

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

எனது கேள்விக்கு பதில் தரமுடியுமா?

எனது கேள்விக்கு பதில் தரமுடியுமா?


மாநகர சபை தேர்தலில் போட்டியிடுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி போட்டியிட்டால் எனது ஆதரவாளர்களை தடபுடலாக கவணிக்கவேண்டும், போஸ்டர்கள், நோடீஸ் என்று எக்கசக்க செலவுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து லட்சமாவது செலவாகும் என்று வைத்துக்கொள்வோம்.

தேர்தலில் தோல்வியடைந்தால் தலையிலே துண்டைப்போட்டுக் கொண்டு படுத்து விடலாம், (அதன் பிறகு குடும்பத்துக்குள் மஃரம் ஒழும்பும் அதுவேற)

இப்படி செலவு செய்து வெற்றியடைந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், நான் செலவு செய்த காசை லாபத்தோடு அரவிடவேண்டும் அல்லவா? அதனை எப்படி பெறலாம் என்று கூறுங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலாக (அது, இது) செய்து உழைக்கலாம் என்று பதில் கூறுகின்றார்கள்.

அப்படியென்றால் பொதுச்சொத்தை கொள்ளையடித்துத்தானே அந்த பணத்தை சம்பாதிக்கவேண்டும். அப்படியென்றால் அது கராம்தானே என்று கேட்டால்,  அதற்கு பதில்  உங்களுக்கு ஒன்றும் தெறியாது அரப்படிச்ச கதை கதைக்கின்றீர்கள் என்று கூறுகின்றார்கள். அது ஏன் என்றுதான் புரியவில்லை.

நான் சமூகத்துக்காக பேசவேண்டும், போராடவேண்டும் என்றால், பொதுமக்கள்தானே எம்மை வெற்றியடைய வைக்கவேண்டும். அதற்கு நான் ஏன் பணம் செலவு செய்யவேண்டும்?

எனது காலத்தையும், நேரத்தையும், எனது தொழிலையும் ஓரம் கட்டிவிட்டு இவர்களுக்காக பாடுபட நான் ஏன் இவர்களுக்கு பணம் செலவு செய்யவேண்டும்?

அந்த பணத்தை லாபத்தோடு திரும்ப பெறுவதற்கு, பொதுமக்களின்  சொத்தை  நான் ஏன் சுரண்ட வேண்டும்?

அப்படி கொள்ளையடிக்கும் பணத்தில் வாழ்ந்தால் இறைவன் அதற்கு பரக்கத் செய்வானா?

இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, பணத்தையும்  செலவு செய்துகொண்டு,  எனக்கு வாக்களியுங்கள் என்று வீடுவீடாக சென்று கெஞ்சுவது ஏன்?

இவர்கள் வீடுவீடாக அழைவது மக்களுக்கு சேவை செய்யவா? அல்லது பதவிக்காகவா? அல்லது கொள்ளையடிக்கவா? என்று புரியவில்லையே..!

ஒரு பள்ளிவாசலில் தலைவராக இருங்கள் அல்லது, எங்களுக்காக பாடுபட தேர்தலில் போட்டியிடுங்கள் என்று மக்கள்தானே எங்களை இனம் கண்டு கெஞ்சி கூத்தாடி அந்த இடத்துக்கு அனுப்பவேண்டும்.

அதற்கு அப்புரம்தான், நாம் என்ன செய்வது மக்கள் விடுவதாக தெறியவில்லை, காலத்தையும், நேரத்தையும் ஒதுக்கி மக்களுக்காக போராடுவோம் என்று நினைத்து செல்பவன்தானே உண்மையில் மக்களுக்காக போராடுவான்.

அவன் அங்கே சென்று மக்களுக்காக பாடுபடுவானா அல்லது விட்ட பணத்தை எப்படி எடுக்கலாம் என்று வழிதேடுவானா? 
(பதவியை கேட்டுத் தெறிபவனுக்கு பதவியை கொடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சும்மாவா சொன்னார்கள்).

அப்படி பதவியை கேட்டு அழைந்து தெறிபவன்தான் உண்மையான சமூகத்தின் எதிரி என்பதை நமது சமூகம் ஏன்தான் புரியமறுக்கின்றதோ தெறியாது?

ஒரு செலவும் செய்யாமல், மக்களாகவே இனம்கண்டு ஒருவரை தேர்ந்தெடுத்து அனுப்புவார்களாக இருந்தால் அவன்தானே   உண்மையான மக்களின் பிரதிநிதி?

(இதனை உங்களின் சிந்தனைக்காகத்தான் எழுதினேன் வேறு நோக்கம் ஒன்றும் இல்லை)

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Saturday, April 9, 2016

திகாமடுல்ல, ஆதிகால ஆரிய குடியேற்றங்களில் ஒன்றாகும். வம்சக் கதைகளின் படி இக்குடியேற்றமானது மிகக்குறுகிய காலத்தில் பலம்மிக்க அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கியது. தீககாமினியின் மகன் பண்டுகாபய குமாரரினால் அனுராதபுரம் தலைநகரமாக மாற்றப்பட்டது. அதிலிருந்து திகாமடுல்ல அனுரபுர அரசனின் ஒரு பிரதேச நிர்வாக பிரிவாகியதுடன், அது பிரதான தானியக் களஞ்சியமாகவும் மாறியது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்து அரசியல் அதிகாரம் தென்மேற்குப் பிரதேசத்துக்கு சென்றதால் திகாமடுல்லையில் காடு வளரத் தொடங்கியது. பின்னர் மலையக மன்னனின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு 1815ல் பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்டது. பிரித்தானிய நிர்வாக முறையின் கீழ் திகாமடுல்லைக்கு மிகக்குறைந்த கவனமே செலுத்தப்பட்டது.

இதனால் இப்பிரதேசத்தில் மிக வேகமாக களைகள் வளரத் தொடங்கியது. அவ்வாறிருந்த போதிலும் பிரித்தானிய ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் உள்நாட்டவர்கள் நிருவாகத்தில் தொடர்புபட்டதனால் விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் எடுத்த முயற்சியின் பயனாக திகாமடுல்லையின்பால் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. 1949ம் ஆண்டில் சுதந்திர இலங்கையின் நிருவாகத்தின் கீழ் இப்பிரதேசத்தை மையமாகக் கொண்டு பிரதான பல்முறையான அபிவிருத்தி விடயங்களில் ஒன்றான கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரதேசம் மிகக் குறுகிய காலத்தினுள் முறையான திட்டமிடலின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு, 1961ல் அம்பாறை மாவட்டம் என்ற பெயரில் புதிய நிர்வாக மாவட்டமாக அரசாங்க நிருவாக கட்டமைப்பிற்குள் உட்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது 13ம் இலக்க தேர்தல் பிரிவாக திகாமடுல்ல என பெயர் குறிப்பிடப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் ; மிகவும் செழிப்பாக விளங்குவதுடன், நிர்வாகத்திலும் அம்பாறை பிரதான நகரமாக விளங்குகின்றது. நகர எல்லையினுள் முக்கியமான மூன்று வாவிகளையும் வனவிலங்குகள் சரணாலயத்தையும் கொண்டிருப்பது அம்பாறை நகரத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் விடயமாகும்.
2012ஆம் ஆண்டின் சனத்தொகை 648,057 ஆகும். இதில் 43.58மூ இலங்கை முஸ்லிம் இனத்தவர்களையும், 39.03மூ இலங்கை சிங்கள இனத்தவர்களையும், 17.39மூ இலங்கைத்தமிழ் இனத்தவர்களையும் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 20 பிரதேச செயலகங்களும் மக்களின் நிர்வாகத்திற்காக உள்ளடக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பௌதீக அமைவிடம் பிரதானமாக சமதரையைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்ற மலைத்தொடர்களைக் கொண்ட சில பிரதேசங்களையும் காணக்கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பரப்பளவு 4,415 சதுர கிலோமீற்றர் அளவில் ஆவதுடன், இம்மாவட்டம் 193 சதுர கிலோமீற்றர் உள்ளக நீர் நிலைகளினால் சூழப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் எல்லை
வடக்கில் - மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்கள்
கிழக்கில் - வங்காள விரிகுடா (இந்து சமுத்திரம்)
தெற்கில் - அம்பாந்தோட்டை மாவட்டம்
மேற்கு மற்றும் தென்கிழக்கில் - மொனறாகலை மாவட்டம்
வடமேற்கில் - பதுளை, மாத்தளை மாவட்டங்கள்

கால நிலை
வருடாந்த மத்திய வெப்பநிலை 33 பாகை செல்சியஸ் ஆகும். அதிகூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆகும். ஆகக் குறைந்த வெப்பநிலையாக 24 பாகை செல்சியஸ் ஆக உள்ளதுடன் இந் நிலை டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணப்படும். வருடாந்த மழைவீழ்ச்சி 1,400 மி.லீ அளவில் உள்ளதுடன் பிரதானமாக தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று மழை கிடைக்கிறது. பொதுவாக மார்ச் முதல் செப்டம்பர் வரை உலர்காலமாகவும் ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரை மழைக்காலமாகவும் உள்ளது.

இவ்வாறு பல அம்சங்களிலும் சிறப்புற்று விளங்கும் அம்பாறை மாவட்டமானது இன, நிற, மத வேறுபாடுகள் மறந்து சமத்துவ, சகோதரத்துவ, மனிதப்பண்புகள் நிறைந்த சகல சமூகங்களினதும் சமாதான பூமியாக விளங்குவது மிகவும் பிரம்மிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

தகவல் - மாவட்ட செயலகம், அம்பாறை
                   சமாதானத்திற்கான கற்கைகள் நிலையம், இலங்கை

பெரீஸ் முஹம்மட் பாறூக், 
(முன்னால் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
 இளைஞர் அமைப்பாளர்,
தேசிய காங்கிரஸ்.

அம்பாறை மாவட்டம் சகல சமூகங்களினதும் சமாதான பூமி...

திகாமடுல்ல, ஆதிகால ஆரிய குடியேற்றங்களில் ஒன்றாகும். வம்சக் கதைகளின் படி இக்குடியேற்றமானது மிகக்குறுகிய காலத்தில் பலம்மிக்க அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கியது. தீககாமினியின் மகன் பண்டுகாபய குமாரரினால் அனுராதபுரம் தலைநகரமாக மாற்றப்பட்டது. அதிலிருந்து திகாமடுல்ல அனுரபுர அரசனின் ஒரு பிரதேச நிர்வாக பிரிவாகியதுடன், அது பிரதான தானியக் களஞ்சியமாகவும் மாறியது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்து அரசியல் அதிகாரம் தென்மேற்குப் பிரதேசத்துக்கு சென்றதால் திகாமடுல்லையில் காடு வளரத் தொடங்கியது. பின்னர் மலையக மன்னனின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு 1815ல் பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்டது. பிரித்தானிய நிர்வாக முறையின் கீழ் திகாமடுல்லைக்கு மிகக்குறைந்த கவனமே செலுத்தப்பட்டது.

இதனால் இப்பிரதேசத்தில் மிக வேகமாக களைகள் வளரத் தொடங்கியது. அவ்வாறிருந்த போதிலும் பிரித்தானிய ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் உள்நாட்டவர்கள் நிருவாகத்தில் தொடர்புபட்டதனால் விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் எடுத்த முயற்சியின் பயனாக திகாமடுல்லையின்பால் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. 1949ம் ஆண்டில் சுதந்திர இலங்கையின் நிருவாகத்தின் கீழ் இப்பிரதேசத்தை மையமாகக் கொண்டு பிரதான பல்முறையான அபிவிருத்தி விடயங்களில் ஒன்றான கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரதேசம் மிகக் குறுகிய காலத்தினுள் முறையான திட்டமிடலின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு, 1961ல் அம்பாறை மாவட்டம் என்ற பெயரில் புதிய நிர்வாக மாவட்டமாக அரசாங்க நிருவாக கட்டமைப்பிற்குள் உட்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது 13ம் இலக்க தேர்தல் பிரிவாக திகாமடுல்ல என பெயர் குறிப்பிடப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் ; மிகவும் செழிப்பாக விளங்குவதுடன், நிர்வாகத்திலும் அம்பாறை பிரதான நகரமாக விளங்குகின்றது. நகர எல்லையினுள் முக்கியமான மூன்று வாவிகளையும் வனவிலங்குகள் சரணாலயத்தையும் கொண்டிருப்பது அம்பாறை நகரத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் விடயமாகும்.
2012ஆம் ஆண்டின் சனத்தொகை 648,057 ஆகும். இதில் 43.58மூ இலங்கை முஸ்லிம் இனத்தவர்களையும், 39.03மூ இலங்கை சிங்கள இனத்தவர்களையும், 17.39மூ இலங்கைத்தமிழ் இனத்தவர்களையும் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 20 பிரதேச செயலகங்களும் மக்களின் நிர்வாகத்திற்காக உள்ளடக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பௌதீக அமைவிடம் பிரதானமாக சமதரையைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்ற மலைத்தொடர்களைக் கொண்ட சில பிரதேசங்களையும் காணக்கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பரப்பளவு 4,415 சதுர கிலோமீற்றர் அளவில் ஆவதுடன், இம்மாவட்டம் 193 சதுர கிலோமீற்றர் உள்ளக நீர் நிலைகளினால் சூழப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் எல்லை
வடக்கில் - மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்கள்
கிழக்கில் - வங்காள விரிகுடா (இந்து சமுத்திரம்)
தெற்கில் - அம்பாந்தோட்டை மாவட்டம்
மேற்கு மற்றும் தென்கிழக்கில் - மொனறாகலை மாவட்டம்
வடமேற்கில் - பதுளை, மாத்தளை மாவட்டங்கள்

கால நிலை
வருடாந்த மத்திய வெப்பநிலை 33 பாகை செல்சியஸ் ஆகும். அதிகூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆகும். ஆகக் குறைந்த வெப்பநிலையாக 24 பாகை செல்சியஸ் ஆக உள்ளதுடன் இந் நிலை டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணப்படும். வருடாந்த மழைவீழ்ச்சி 1,400 மி.லீ அளவில் உள்ளதுடன் பிரதானமாக தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று மழை கிடைக்கிறது. பொதுவாக மார்ச் முதல் செப்டம்பர் வரை உலர்காலமாகவும் ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரை மழைக்காலமாகவும் உள்ளது.

இவ்வாறு பல அம்சங்களிலும் சிறப்புற்று விளங்கும் அம்பாறை மாவட்டமானது இன, நிற, மத வேறுபாடுகள் மறந்து சமத்துவ, சகோதரத்துவ, மனிதப்பண்புகள் நிறைந்த சகல சமூகங்களினதும் சமாதான பூமியாக விளங்குவது மிகவும் பிரம்மிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

தகவல் - மாவட்ட செயலகம், அம்பாறை
                   சமாதானத்திற்கான கற்கைகள் நிலையம், இலங்கை

பெரீஸ் முஹம்மட் பாறூக், 
(முன்னால் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
 இளைஞர் அமைப்பாளர்,
தேசிய காங்கிரஸ்.

Sunday, March 27, 2016


இன்று நாங்கள் கண் ஊடாக காணக் கூடிய காட்சிகள் தான். ஒரு விவசாயி தனது நிலத்தை பதப்படுத்தி, நெல் விதைகளை விதைத்து, உயர்தர உரங்களையும், கிருமி நாசிநிகளையும் தெலித்து, பல மாதங்களாக பாதுகாத்து அறுவடை செய்கின்றான்.

அதன் பின் எமது விவசாயிகளின் நிலை என்ன?

அறுவடை செய்த நெல்களை நியாயமான விலைகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தின்டாடுகிறார்கள். எத்தனையோ விவசாயிகள் விவசாயம் மூலம் ஏற்பட்ட கடன்களை ஈடு செய்வதற்காக நெற்களை நஷ்டத்தில் விற்பனை செய்கின்றார்கள். பல மாதங்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டவர்களின் நிலை என்ன? (இவ் விவசாயிகளைப் பற்றி நல்லாட்சி அரசு சிந்திக்குமா!

ஏன் என்றால் இவ் நல்லாட்சி அரசை வித்திடுவதற்கு உரமாக இருந்தவர்கள் எமது விவசாயிகளே! கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கரங்கள் நல்லாட்சி அரசுக்கு புள்ளடி இடுவதற்கு தயாரானதே! இவ் வெற்றிக்கு காரணம்.

விவசாயிகளுக்கான உரமானிய விநியோக முறையை திட்டத்தை இலகுபடுத்த வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மக்கள், தங்கள் விவசாயத்துக்குரிய உரத்தை இலகுவாக எடுக்க கூடியதாக இருந்தது. (இவ் வாட்சியில் உரமானிய விநியோகத்தில் பல ஊழல்கள் இருப்பதாக விமர்சனங்கள் உள்ளது) என்றாலும் நல்லாட்சியில் உழல் அற்ற முறையில் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற அரசின் என்னம் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

என்றாலும் கடந்த போக நெற்செய்கையின் போது விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டது. கட்டாயம் தேசிய சேமிப்பு வங்கியில் வங்கிக் கணக்குகள் இருக்க வேண்டும். இப் போகம் விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது 'இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி', அடுத்த போகம் எவ் வங்கியில் திறக்க அறிவுருத்தல் வரப்போகிதோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

மேற் கூறப்பட்ட வங்கி ரீதியான நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் பணங்கள் மறைமுகமாக முடக்கப்படுகின்றனர். இதற்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை வளங்க வேண்டும். இலங்கையில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிப்பதால் அதற்கென்ற விஷேட வங்கி நாடு பூராகவும் திறக்கப்பட வேண்டும். அத்தோடு இலங்கை நாட்டுக்கென்று ஒரு சிறந்த 'விவசாய கொள்கை' உருவாக்கப்பட வேண்டும்.

மேற் கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, நமது தலைவர்கள் பாராளுமன்றம், மாகாண சபை, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

                                                              பெரீஸ் முஹம்மட் பாறூக்,
                                                              (முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
                                                               இளைஞர் அமைப்பாளர் - தேசிய காங்கிரஸ்.


விவசாயிகளுக்காக குரல் எழுப்பிய எத்தனை தலைமைகள்!


இன்று நாங்கள் கண் ஊடாக காணக் கூடிய காட்சிகள் தான். ஒரு விவசாயி தனது நிலத்தை பதப்படுத்தி, நெல் விதைகளை விதைத்து, உயர்தர உரங்களையும், கிருமி நாசிநிகளையும் தெலித்து, பல மாதங்களாக பாதுகாத்து அறுவடை செய்கின்றான்.

அதன் பின் எமது விவசாயிகளின் நிலை என்ன?

அறுவடை செய்த நெல்களை நியாயமான விலைகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தின்டாடுகிறார்கள். எத்தனையோ விவசாயிகள் விவசாயம் மூலம் ஏற்பட்ட கடன்களை ஈடு செய்வதற்காக நெற்களை நஷ்டத்தில் விற்பனை செய்கின்றார்கள். பல மாதங்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டவர்களின் நிலை என்ன? (இவ் விவசாயிகளைப் பற்றி நல்லாட்சி அரசு சிந்திக்குமா!

ஏன் என்றால் இவ் நல்லாட்சி அரசை வித்திடுவதற்கு உரமாக இருந்தவர்கள் எமது விவசாயிகளே! கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கரங்கள் நல்லாட்சி அரசுக்கு புள்ளடி இடுவதற்கு தயாரானதே! இவ் வெற்றிக்கு காரணம்.

விவசாயிகளுக்கான உரமானிய விநியோக முறையை திட்டத்தை இலகுபடுத்த வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மக்கள், தங்கள் விவசாயத்துக்குரிய உரத்தை இலகுவாக எடுக்க கூடியதாக இருந்தது. (இவ் வாட்சியில் உரமானிய விநியோகத்தில் பல ஊழல்கள் இருப்பதாக விமர்சனங்கள் உள்ளது) என்றாலும் நல்லாட்சியில் உழல் அற்ற முறையில் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற அரசின் என்னம் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

என்றாலும் கடந்த போக நெற்செய்கையின் போது விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டது. கட்டாயம் தேசிய சேமிப்பு வங்கியில் வங்கிக் கணக்குகள் இருக்க வேண்டும். இப் போகம் விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது 'இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி', அடுத்த போகம் எவ் வங்கியில் திறக்க அறிவுருத்தல் வரப்போகிதோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

மேற் கூறப்பட்ட வங்கி ரீதியான நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் பணங்கள் மறைமுகமாக முடக்கப்படுகின்றனர். இதற்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை வளங்க வேண்டும். இலங்கையில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிப்பதால் அதற்கென்ற விஷேட வங்கி நாடு பூராகவும் திறக்கப்பட வேண்டும். அத்தோடு இலங்கை நாட்டுக்கென்று ஒரு சிறந்த 'விவசாய கொள்கை' உருவாக்கப்பட வேண்டும்.

மேற் கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, நமது தலைவர்கள் பாராளுமன்றம், மாகாண சபை, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

                                                              பெரீஸ் முஹம்மட் பாறூக்,
                                                              (முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
                                                               இளைஞர் அமைப்பாளர் - தேசிய காங்கிரஸ்.


Wednesday, February 10, 2016

'சிறம சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால். சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் வங்களாவடி மற்றும் வளத்தாப்பிட்டி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பஸ் தரிப்பிடங்களை முன்னால் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் .பெரீஸ் முஹம்மட் பாறூக் சென்று பார்வையிட்டார்.


'சிறம சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் இரண்டு பஸ் தரப்பிடங்கள்.

'சிறம சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால். சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் வங்களாவடி மற்றும் வளத்தாப்பிட்டி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பஸ் தரிப்பிடங்களை முன்னால் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் .பெரீஸ் முஹம்மட் பாறூக் சென்று பார்வையிட்டார்.


Wednesday, February 3, 2016

Monday, June 1, 2015

முன்னால் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் முயற்சியின் பயனாக வடிவமைக்கப்பட்ட ஜனாஸா வாகனம் தற்போது மக்கள் பாவனையில் இயங்கிக் கொண்டு வருகிறது.

இச் சேவையினை பெற்றுக் கொள்ள வேண்டுமானால்!

  • பிரதேச சபை எல்லைக் குற்பட்ட பிரதேசங்களில் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம், 
  • பிரதேசத்திற்கு வெளியே பயன்படுத்தும் போது சமூர்த்தி பயனாளிகள் கிலோ மீற்றரிற்கு பத்து (10/=) ரூபாயும், ஏனையவர்கள் கிலோ மீற்றரிற்கு இருபது (20/=) ரூபாயும் செலுத்தி இச் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.





ஜனாஸா வேவையினை மக்களுக்காக வழங்கும் சம்மாந்துறை பிரதேச சபை.

முன்னால் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் முயற்சியின் பயனாக வடிவமைக்கப்பட்ட ஜனாஸா வாகனம் தற்போது மக்கள் பாவனையில் இயங்கிக் கொண்டு வருகிறது.

இச் சேவையினை பெற்றுக் கொள்ள வேண்டுமானால்!

  • பிரதேச சபை எல்லைக் குற்பட்ட பிரதேசங்களில் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம், 
  • பிரதேசத்திற்கு வெளியே பயன்படுத்தும் போது சமூர்த்தி பயனாளிகள் கிலோ மீற்றரிற்கு பத்து (10/=) ரூபாயும், ஏனையவர்கள் கிலோ மீற்றரிற்கு இருபது (20/=) ரூபாயும் செலுத்தி இச் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.





Thursday, March 12, 2015

கல்முனை மக்களின் நலன் பற்றி அதிகம் பேசும் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ் அவர்களை அண்மையில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில்,

கடந்த 1990ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை நீர்விநியோக திட்டத்தில் ஒரு நீர்த்தாங்கியை அமைத்துக்கொள்ளாத ஒரு ஊராக கல்முனைக்குடி காணப்படுவதாக கவலைப்பட்டார். தற்போது அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைப்பதாக தெரிவித்தார். ஒரு நாளுக்கு சுமார் ஐந்து இலட்சம் லீட்டர் நீர் கல்முனைக்குடிக்கு தேவைப்படுகின்றன என்று தெரிவித்த அவர், 

01. கல்முனைக்குடிக்கு தொடர்ச்சியான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
02. கல்முனைக்குடி பிரதேசத்தில் 25 ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட நீர்விநியோக குழாய்கள் அகற்றப்பட்டு 700 மில்லி மீற்றர் குழாய்கள் புதைக்கப்பட வேண்டும்.
03. கல்முனைக்குடிக்கு நிரந்தரமான நீர்த்தாங்கி ஒன்றை எமது அரசு மக்களுக்கு அமைத்து தர வேண்டும் 

என்ற மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீர்விநியோக அமைச்சர் ஆகியோருக்கு பதிவு தபாலில் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். இவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காதவிடத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி கல்முனை மாநகர மத்தியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தவுள்ளதாக கூறினார். 

"றியாஸ் சொன்னால் செய்வார் என்பதே கல்முனை மக்களிடமிருந்து கிடைக்கும் செய்தியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்."

ஒரு முன்மாதிரி, ஏப்ரல் மாதம் உண்ணாவிரதம்!!!

கல்முனை மக்களின் நலன் பற்றி அதிகம் பேசும் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ் அவர்களை அண்மையில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில்,

கடந்த 1990ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை நீர்விநியோக திட்டத்தில் ஒரு நீர்த்தாங்கியை அமைத்துக்கொள்ளாத ஒரு ஊராக கல்முனைக்குடி காணப்படுவதாக கவலைப்பட்டார். தற்போது அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைப்பதாக தெரிவித்தார். ஒரு நாளுக்கு சுமார் ஐந்து இலட்சம் லீட்டர் நீர் கல்முனைக்குடிக்கு தேவைப்படுகின்றன என்று தெரிவித்த அவர், 

01. கல்முனைக்குடிக்கு தொடர்ச்சியான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
02. கல்முனைக்குடி பிரதேசத்தில் 25 ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட நீர்விநியோக குழாய்கள் அகற்றப்பட்டு 700 மில்லி மீற்றர் குழாய்கள் புதைக்கப்பட வேண்டும்.
03. கல்முனைக்குடிக்கு நிரந்தரமான நீர்த்தாங்கி ஒன்றை எமது அரசு மக்களுக்கு அமைத்து தர வேண்டும் 

என்ற மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீர்விநியோக அமைச்சர் ஆகியோருக்கு பதிவு தபாலில் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். இவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காதவிடத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி கல்முனை மாநகர மத்தியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தவுள்ளதாக கூறினார். 

"றியாஸ் சொன்னால் செய்வார் என்பதே கல்முனை மக்களிடமிருந்து கிடைக்கும் செய்தியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்."

Tuesday, March 10, 2015

கட்டிட அடிக்கல் நாட்டு விழா!




அதி நவீன பிரதேச சபைக் கட்டிடம்!


அதி நவீன வசதிகளைக் கொண்ட சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய கட்டிடம்.

கட்டிட அடிக்கல் நாட்டு விழா!




அதி நவீன பிரதேச சபைக் கட்டிடம்!



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இன்று நமது மண்ணில் பிரந்த ஒவ்வொரு மனிதினிடம் வாயில் எல்லாம், நாம் இம் முறை 'சம்மாந்துறைக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்குமா?' என வினா எழுப்பினால், அவர்களிடம் இருந்து வரும் பதில் 'கொஞ்சம் கஷ்டம் தான்!!!' 

இந்த மன நிலை உருவாவுவதற்கு காரணம் என்ன? ஏன் இவ்வாறான ஒரு தன்நம்பிக்கை இல்லாத வார்த்தை இவர்களது வாய்களில் வருகிறது? சம்மாந்துறையில் உள்ள தலைமைகள் மக்களை ஏன் ஒரு நிலைப்படுத்த தவறிவிட்டார்கள்? இங்குள்ள தலைமைகளால் இம் மக்களின் மன சஞ்சலத்தை போக்க முடியாதா?... போன்ற பல வினாக்கள் நம் நெஞ்சை உருக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஏன் சம்மாந்துறை மக்கள் சிறந்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பதில் காலத்தை வீனடிக்கின்றனர்? மக்கள் எதிர்பாக்கும் தலைமைகளின் தகுதிகள் என்ன? பன்புகள் என்ன? மனோ நிலை என்ன?

இவ் வினாக்களை மக்களிடம் எழுப்பினால் வரும் பதில்கள்? (நமது பேச்சு வழக்கில்)

1) அரசியல் வாதி என்றால் சாரப்பத்தை கட்ட தெரிஞ்சிருக்க வேண்டும். கட்சித் தலைமை பிழை தெய்தாலும் அவருக்கு தலை அசைத்து போக வேண்டும். ஊர் எப்படி கெட்டு போனாலும் பதவிகளிலும் சொகுசுகளிலும் வைத்து அழகு பார்க்க வேண்டும். மற்றவன் பாதிக்கப்பட்டாலும், எங்கள் நல்லா தலைமை நல்லா இருக்க வேண்டும்.

2) அடிக்கடி கட்சி தாவ வேண்டும், பதவியை பெற்றுக் கொள்வதற்காக எதற்கும் துணிய வேண்டும்.

3) மக்களிடம் இருந்து பணம் சூரையாட வேண்டும், அதை வைத்து கவர்ச்சியான அரசியல் செய்ய வேண்டும்.

4) தேர்தல் காலங்களில் மக்கள் மனம் விரும்பும் சௌக்கியங்களைக் கொடுக்க வேண்டும்.

5) ஊருக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும், ஒழுக்க விழுமியங் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், ஒழுக்க முள்ளவராக இருக்க வேண்டும், இளைஞர்களை சரியாக வழிநடாத்தக் கூடியரவாக இருக்க வேண்டும், நல்லொழுக்க முடையவராக இருக்க வேண்டும்;.

போன்ற கருத்துக்களை தெரு ஓரங்களிலும், தேனீர் கடைகளிலும், சந்தைகளிலும் மக்கள் விவாதிக்கின்றானர்.

ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அரசியலைப் பார்க்கும் மன வேதனையளிக்கிறது. காரணம், அவர்கள் விரும்பும் அரசியல், தங்கள் சமகால சுகத்திற்காக அவர்களது எதிர்கால சந்ததிகளின் வாழ்வை அவர்களே! புதை குழியில் தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் புதுமுக கோஷம்.

சமகாலத்தில் புதுமுகம் தேட போனால், அனைவரும் சுய நல முகமாக காணப்புகின்றது. சமூக மாற்ற நடக்கும் போது தானாகவே அரசியலில் புதுமுகம் நுழையும். அது இயற்கையாக நடைபெறும். இயற்கையில் நாம் கை வைக்க போனால் நாம் இறைவன மிஞ்சி விடுவோம்.

சமூக மாற்றத்திற்கு நல்லதொரு சான்று நம்மிடமுள்ளது!!!

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பிறகு துடிப்புள்ள இளைஞர்கள், அக்காலத்தில் நமது சம்மாந்துறை அரைசியலைப் பற்றி சிந்தித்தார்கள் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் தலைவரானார்.

சமகால அரசியலில், சம காலத்தில் நம்மிடம் உள்ள தலைவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதே! நமக்கு சிறந்த வழி!!!

சமகாலத்தில் எதிர் கால பாராளுமன்ரத் தேர்தலை மய்யப்படுத்தி பேசப்படும் தலைவர்களை பார்த்தோமானால்...

1) கௌரவ எம்.ஐ.எம் மன்சூர் - மாகாண அமைச்சர்
2) கௌரவ ஏ.எம்.எம் நௌஷாட் - தவிசாளர்
3) கௌரவ எஸ்.எம்.எம் முஸ்தபா – பிரதேச சபை உறுப்பினர்
4) ஐ.எல்.எம் மாஹீர் - போக்குவரத்து பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி

மேற் கூறப்பட்டவர்களில் மிகவும் சிறந்தவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

வெற்றிலை, யானை, மரம் எனும் சின்னத்தை மரந்து, முதலில் சிறந்த மனிதனை தெறிவு செய்ய வேண்டுத்.

நம்மை வழி நடத்துவது, வழி காட்டுவது சின்னமல்ல. சிறந்த தலைமைத்து ஆற்றல் கொண்ட, ஒழுக்க விழுமியம் கொண்ட தலைவனே!

'சம்மாந்துறைக்கு இம்முறையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கமாட்டாது என்ற தன் நம்பிக்கையற்ற சமூகத்தில் இருந்து எமது மக்களைக் காப்பாற்றி, தன்நம்பிக்கையுள்ள அழகிய சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவோம்'

சம்மாந்துறைக்கு இம்முறையும் பாராளுமன்ற பிரிதிநிதித்துவம் கிடைக்கமாட்டாது என பலர் மார்பு தட்டி பேசுகிறார்கள், காரணம் என்ன?


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இன்று நமது மண்ணில் பிரந்த ஒவ்வொரு மனிதினிடம் வாயில் எல்லாம், நாம் இம் முறை 'சம்மாந்துறைக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்குமா?' என வினா எழுப்பினால், அவர்களிடம் இருந்து வரும் பதில் 'கொஞ்சம் கஷ்டம் தான்!!!' 

இந்த மன நிலை உருவாவுவதற்கு காரணம் என்ன? ஏன் இவ்வாறான ஒரு தன்நம்பிக்கை இல்லாத வார்த்தை இவர்களது வாய்களில் வருகிறது? சம்மாந்துறையில் உள்ள தலைமைகள் மக்களை ஏன் ஒரு நிலைப்படுத்த தவறிவிட்டார்கள்? இங்குள்ள தலைமைகளால் இம் மக்களின் மன சஞ்சலத்தை போக்க முடியாதா?... போன்ற பல வினாக்கள் நம் நெஞ்சை உருக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஏன் சம்மாந்துறை மக்கள் சிறந்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பதில் காலத்தை வீனடிக்கின்றனர்? மக்கள் எதிர்பாக்கும் தலைமைகளின் தகுதிகள் என்ன? பன்புகள் என்ன? மனோ நிலை என்ன?

இவ் வினாக்களை மக்களிடம் எழுப்பினால் வரும் பதில்கள்? (நமது பேச்சு வழக்கில்)

1) அரசியல் வாதி என்றால் சாரப்பத்தை கட்ட தெரிஞ்சிருக்க வேண்டும். கட்சித் தலைமை பிழை தெய்தாலும் அவருக்கு தலை அசைத்து போக வேண்டும். ஊர் எப்படி கெட்டு போனாலும் பதவிகளிலும் சொகுசுகளிலும் வைத்து அழகு பார்க்க வேண்டும். மற்றவன் பாதிக்கப்பட்டாலும், எங்கள் நல்லா தலைமை நல்லா இருக்க வேண்டும்.

2) அடிக்கடி கட்சி தாவ வேண்டும், பதவியை பெற்றுக் கொள்வதற்காக எதற்கும் துணிய வேண்டும்.

3) மக்களிடம் இருந்து பணம் சூரையாட வேண்டும், அதை வைத்து கவர்ச்சியான அரசியல் செய்ய வேண்டும்.

4) தேர்தல் காலங்களில் மக்கள் மனம் விரும்பும் சௌக்கியங்களைக் கொடுக்க வேண்டும்.

5) ஊருக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும், ஒழுக்க விழுமியங் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், ஒழுக்க முள்ளவராக இருக்க வேண்டும், இளைஞர்களை சரியாக வழிநடாத்தக் கூடியரவாக இருக்க வேண்டும், நல்லொழுக்க முடையவராக இருக்க வேண்டும்;.

போன்ற கருத்துக்களை தெரு ஓரங்களிலும், தேனீர் கடைகளிலும், சந்தைகளிலும் மக்கள் விவாதிக்கின்றானர்.

ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அரசியலைப் பார்க்கும் மன வேதனையளிக்கிறது. காரணம், அவர்கள் விரும்பும் அரசியல், தங்கள் சமகால சுகத்திற்காக அவர்களது எதிர்கால சந்ததிகளின் வாழ்வை அவர்களே! புதை குழியில் தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் புதுமுக கோஷம்.

சமகாலத்தில் புதுமுகம் தேட போனால், அனைவரும் சுய நல முகமாக காணப்புகின்றது. சமூக மாற்ற நடக்கும் போது தானாகவே அரசியலில் புதுமுகம் நுழையும். அது இயற்கையாக நடைபெறும். இயற்கையில் நாம் கை வைக்க போனால் நாம் இறைவன மிஞ்சி விடுவோம்.

சமூக மாற்றத்திற்கு நல்லதொரு சான்று நம்மிடமுள்ளது!!!

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பிறகு துடிப்புள்ள இளைஞர்கள், அக்காலத்தில் நமது சம்மாந்துறை அரைசியலைப் பற்றி சிந்தித்தார்கள் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் தலைவரானார்.

சமகால அரசியலில், சம காலத்தில் நம்மிடம் உள்ள தலைவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதே! நமக்கு சிறந்த வழி!!!

சமகாலத்தில் எதிர் கால பாராளுமன்ரத் தேர்தலை மய்யப்படுத்தி பேசப்படும் தலைவர்களை பார்த்தோமானால்...

1) கௌரவ எம்.ஐ.எம் மன்சூர் - மாகாண அமைச்சர்
2) கௌரவ ஏ.எம்.எம் நௌஷாட் - தவிசாளர்
3) கௌரவ எஸ்.எம்.எம் முஸ்தபா – பிரதேச சபை உறுப்பினர்
4) ஐ.எல்.எம் மாஹீர் - போக்குவரத்து பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி

மேற் கூறப்பட்டவர்களில் மிகவும் சிறந்தவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

வெற்றிலை, யானை, மரம் எனும் சின்னத்தை மரந்து, முதலில் சிறந்த மனிதனை தெறிவு செய்ய வேண்டுத்.

நம்மை வழி நடத்துவது, வழி காட்டுவது சின்னமல்ல. சிறந்த தலைமைத்து ஆற்றல் கொண்ட, ஒழுக்க விழுமியம் கொண்ட தலைவனே!

'சம்மாந்துறைக்கு இம்முறையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கமாட்டாது என்ற தன் நம்பிக்கையற்ற சமூகத்தில் இருந்து எமது மக்களைக் காப்பாற்றி, தன்நம்பிக்கையுள்ள அழகிய சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவோம்'

Friday, February 13, 2015

இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் முயற்சியின் பயனாக, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கௌரவ எம்.எல்.ஏ அமீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வுக்கு முன்னால் சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம் பைஸல் அமீன் அவர்களும் சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி ரபீக் கான் அவர்களும், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலந்து சிறப்பித்து விளையாட்டு உபகரணத்தை கழக அங்கத்தவர்களிடம் வழங்கி வைத்தனர்.





Blue Sky Youth Club இற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவம்.

இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் முயற்சியின் பயனாக, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கௌரவ எம்.எல்.ஏ அமீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வுக்கு முன்னால் சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம் பைஸல் அமீன் அவர்களும் சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி ரபீக் கான் அவர்களும், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலந்து சிறப்பித்து விளையாட்டு உபகரணத்தை கழக அங்கத்தவர்களிடம் வழங்கி வைத்தனர்.





This entry was posted in :
இக் கூட்டத்திற்கு சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி ரபீக் கான் அவர்களும் சம்மாந்துறை பிரதேச இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறுக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலற்து சிறப்பித்தனர்.  




Sammanthurai Friendship Youth Club இன் அங்குராப்பணக் கூட்டம்

இக் கூட்டத்திற்கு சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி ரபீக் கான் அவர்களும் சம்மாந்துறை பிரதேச இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறுக் பெரீஸ் முஹம்மட் அவர்களும் கலற்து சிறப்பித்தனர்.  




Thursday, February 12, 2015

Tuesday, February 3, 2015

Thursday, November 20, 2014

சம்மாந்துறை பிரதேச சபையில் தற்காலிகமாகக் கடமையாற்றிய சாரதிகள் 04 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நியமனக் கடிதங்கள் இன்று 20.11.2014 ஆம் திகதி கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களினால்

1) செய்யது அகமது ஜெமீல்
2) சுப்ரமணியம் கமலதாசன்
3) அசனார் லெப்பை அப்துல் ரஹ்மான்
4) தர்மலிங்கம் மதன்

ஆகியோறுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் உதவித் தவிசாளர் ஏ. கலீலுர் ரஹ்மான், உறுப்பினர் மீராமுகைதீன், செயளாலர் ஏ. சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





சம்மாந்துறை பிரதேச சபையில் 04 நபர்களுக்கு நிரந்தர நியமனம்.

சம்மாந்துறை பிரதேச சபையில் தற்காலிகமாகக் கடமையாற்றிய சாரதிகள் 04 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நியமனக் கடிதங்கள் இன்று 20.11.2014 ஆம் திகதி கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களினால்

1) செய்யது அகமது ஜெமீல்
2) சுப்ரமணியம் கமலதாசன்
3) அசனார் லெப்பை அப்துல் ரஹ்மான்
4) தர்மலிங்கம் மதன்

ஆகியோறுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் உதவித் தவிசாளர் ஏ. கலீலுர் ரஹ்மான், உறுப்பினர் மீராமுகைதீன், செயளாலர் ஏ. சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Wednesday, November 19, 2014

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமிய மக்களை வழுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடாத்தலினதும் அடிப்படையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல்ப்படுத்தப்படும் Nenasala – அறிவகம், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் அவர்களினால், சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல் அமைந்துள்ள MUFO விளையாட்டு கழக காரியாலயத்தில் 'Nenasala - அறிவகம்' 18 நவம்பர் 2014 ஆம் திகதி, பி.ப 04.00 மணிக்கு திறந்து வைக்கப்படது.






'உலக அறிவு கிராமத்திற்கு' Nenasala (அறிவகம்) நிலையம் திறப்பு விழா

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமிய மக்களை வழுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினதும் வழிநடாத்தலினதும் அடிப்படையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல்ப்படுத்தப்படும் Nenasala – அறிவகம், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ அமீர் அவர்களினால், சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல் அமைந்துள்ள MUFO விளையாட்டு கழக காரியாலயத்தில் 'Nenasala - அறிவகம்' 18 நவம்பர் 2014 ஆம் திகதி, பி.ப 04.00 மணிக்கு திறந்து வைக்கப்படது.






Monday, November 17, 2014


MUFO விளையாட்டுக் கழகத்தின் தலைவர், அங்கத்தவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க

தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய
அவர்களின்
அறிவுறுத்தலுக்கு அமைவாக

சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும்,
அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும்,
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய
கௌரவ அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்
அவர்களின்
அழைப்பின் பேரில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கௌரவ எம்.எல்.ஏ அமீர்
அவர்களினால்

சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல்
"Nenasala - அறிவகம்"
(194, அமீர் அலி இல்லம் - பிரதேச சபை வீதியில்)

18 நவம்பர் 2014 ஆம் திகதி
பி.ப 04.00 மணிக்கு
திறந்து வைக்கப்படவுள்ளது.

"இந் நிகழ்வுக்கு கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்"

NENASALA (அறிவகம்) திறப்பு விழாவிற்கான அழைப்பிதல்!


MUFO விளையாட்டுக் கழகத்தின் தலைவர், அங்கத்தவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க

தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய
அவர்களின்
அறிவுறுத்தலுக்கு அமைவாக

சம்மாந்துறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும்,
அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும்,
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய
கௌரவ அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்
அவர்களின்
அழைப்பின் பேரில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கௌரவ எம்.எல்.ஏ அமீர்
அவர்களினால்

சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு – 02 இல்
"Nenasala - அறிவகம்"
(194, அமீர் அலி இல்லம் - பிரதேச சபை வீதியில்)

18 நவம்பர் 2014 ஆம் திகதி
பி.ப 04.00 மணிக்கு
திறந்து வைக்கப்படவுள்ளது.

"இந் நிகழ்வுக்கு கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்"

Wednesday, November 5, 2014

சம்மாந்துறை மண்ணும் மக்களும் கடந்த 40 வருடமாக தக்க வைத்துக் கொண்டிருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எனும் சிம்மாசனத்தை இளந்த நிலையிலும், நிர்கதியாக்கப்பட்ட நிலயில் இன்று காணப்படுகின்றிரார்கள்.

சம்மாந்துறை மண்ணுக்கு முறையான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை இளம் பாலகன் முதல் முதியோர் வரை ஆசைப்படுகின்றனர். நியாயமான கோரிக்கையும், மனுவும் தான்! ஆனால் அவர்கள் அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் மிகப் பாரிய தவருகளை விடுகின்றார்கள்.

அது அவர்களின் தவரல்ல! இன்று மக்கள் தங்களது மார்க்கத்து பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது மார்க்க வழிகாட்டியான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், பகவத்கீதை போன்ற பொக்கிஸஹ்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது இறைத்தூதர்கள், கடவுள்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், அதன் மரணித்த தலைவர்களின் ஒசியத்துக்களையும், கட்சியின் சின்னங்களையும், கட்சியின் கீதங்களையும் பின்பற்றுகிறார்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும், அதன் உயர்பீட உறுப்பினர்களும், அதன் வேட்பாளர்களும் பல மாயாஜால வித்தைகளையும், பல நாடகங்களையும், பல திரைப்படங்களையும், பல புராணக் கதைகளையும் அரங்கேற்றுகிரார்கள். அவர்கள் தேர்தல் மேடையில் போடும் வேடங்களும், மக்கள் முன்னிலையில் செய்யும் சத்தியங்களும் மக்களின் வாழ்வில் பால் வார்ப்பதைப் போல் தோன்றுகிறது. 'அது வெறும் கானல் நீராகவே அமைகின்றது'.

மக்கள் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளத் துடிப்போடு உள்ள அரசியல் கட்சி, தங்களால் அல்லது தங்கள் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்னெடுக்கப்படவிருக்கும் கடந்து கால, நிகழ் கால அல்லது எதிர்கால திட்டங்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்யும். அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பார்த்தோமானால் மக்கள் சனத்திறல் இல்லை. வெறச்சோடிப் போயிருக்கும். 

ஒரு சில கட்சிகள் சமகால அரசியலுக்கு சாதகமான வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை அமைத்துக் கொள்ளும். அவர்கள் பிரச்சாரத்தில் சமகால பிரச்சினைகளைப் பற்றி அக்குவேரையாக ஆணி வேரையாக மக்களுக்கு விளங்கப்படுத்துவார்கள். சனத் தொகை மடைதிறன்ட வெள்ளம் போல் காட்சி அழிக்கும், கடைசியில் பார்த்தால் கட்சி தேர்தலில் வெற்றியடைந்திருக்கும், நமது சம்மாந்துறை மண்ணும், மக்களும் கைசேதமடைந்திருப்பார்கள்.

கடந்த காலங்களில் நாம் விட்ட தவறின் மூலம் இளக்கப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு எதிர் காலத்தில் மீட்டெடுப்பது என்பதில் இன்னும் மக்கள் தெளிவடையவும் வில்லை. அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், கல்விமான்களும் தெளிவுபடுத்தவும் இல்லை. சம காலத்தில் சேற்றில் முளைத்த காலானைப் போல் இன்று புது புது தலைவர்கள் முளைத்துவிட்டார்கள். அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்படுவது, உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் இருந்து உயர்வடைவோம் என்றல்ல, அவர்கள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் என்றும் மந்திரி சபையில் மந்திரி என்றும், அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சரக்கு கடையில் கிடக்கும் பருப்பு என நினைத்துள்ளார்கள். இன்று நமது மண்ணின் அரசியல் பணம் படைத்தவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட ஒரு பொருளாக மாரிவிட்டது. அரசியலுக்கு வருவது என்றால் பணம் படைத்தவன் மட்டும் தான் வர வேண்டும் என்ற மன நிலை மக்கள் மத்தியில் மாற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் பிறந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் நுழையும் உரிமை உண்டு. 'ஒவ்வொரு இளைஞனும் உங்களை நீங்கள் இந்த சமூகத்தின் தலைவராக வருவதற்து தயாராக வேண்டும், அதற்கு பணமோ! குழமோ! தடையல்ல...'

இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அவதானித்து பார்த்தீர்களானால் அரசியல் தலைவர்களிடம் கொள்கை இல்லை... கொள்கை இருப்பவர்களிடம் மக்கள் இல்லை... அது தான் இன்றைய சம்மாந்துறையின் அரசியல் நிலை.

சமகாலத்தில் ஒரு அரசியல் கட்சியில் உள்ள நபர் கட்சியில் உள்ள போது கட்சியை வாழ்த்துகிறார், கட்சியின் கொள்கையை பரப்புகிறார், கட்சியின் தலைமையை புகழ்கின்றார், இதே நேரத்தில் தேர்தல் ஒன்று குரிக்கிடுகிறது. அத் தேர்தளில் அக் கட்சி அந் நபருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வில்லை... அப்பொழுது அவரது அறிக்கை மாறுகிறது. அவரது நாக்கு தடம் புறழ்கிறது... அச் சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் வாழ்த்திப் பேசிய கட்சியை தூற்றியும், கடந்த காலத்தில் தூற்றியும், தூசித்தும் பேசிய காட்சியை வாழ்த்தியும் பேச ஆரம்பிக்கின்றார் 'இது தான் சந்தர்ப்ப வாத அரசியல் வாதியின் நிலை'

நாம் எவ்வாறான சரியான பிரதிநிதியை சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் தெரிவு செய்ய வேண்டும்?

1. ஒழுக்கம் மற்றும் மார்க்க விழுவியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. சந்தர்ப்பவாத அரசியலை செய்யாதவராக இருக்க வேண்டும்.
3. நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டி, சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் 'நல்லாட்சி' யை உருவாக்குபவராக இருக்க வேண்டும்.
4. மக்களிடம் அன்பாகவும், பன்பாகவும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும்.
5. சம்மாந்துறை மண்ணினதும், மக்களினதும் நலனில் தூரநோக்கு சிந்தனையோடு செயல்படுவராக இருக்க வேண்டும்.
6. தேர்தல் காலங்களில், நாம் பெற்றெடுத்த இளைஞர்களை பிழையான வழியில் நடத்தாதவராக இருக்க வேண்டும்.
7. கடந்த கால தேர்தல்களில் நமக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியவராக இருக்க வேண்டும்.
8. இலஞ்சம் மற்று ஊழல்களில் ஈடுபடாதவராகவும், அதனை விரும்பாதவராகவும் இருக்க வேண்டும்.
9. எச் சந்தர்பத்திலும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

போன்ற நற்குணங்களை உடைய ஒரு மனிதனை, நமது மண்ணில் தெரிவு செய்வதன் மூலம் தான், சிறந்த அரசியல், கலாசார, பண்பாடுகளை நமது சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் கொடுக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தலைப் பற்றி சிந்திக்கும் கால கட்டத்தில், ஏன் சம்மாந்துறையில் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள்....

சம்மாந்துறை மண்ணும் மக்களும் கடந்த 40 வருடமாக தக்க வைத்துக் கொண்டிருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எனும் சிம்மாசனத்தை இளந்த நிலையிலும், நிர்கதியாக்கப்பட்ட நிலயில் இன்று காணப்படுகின்றிரார்கள்.

சம்மாந்துறை மண்ணுக்கு முறையான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை இளம் பாலகன் முதல் முதியோர் வரை ஆசைப்படுகின்றனர். நியாயமான கோரிக்கையும், மனுவும் தான்! ஆனால் அவர்கள் அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் மிகப் பாரிய தவருகளை விடுகின்றார்கள்.

அது அவர்களின் தவரல்ல! இன்று மக்கள் தங்களது மார்க்கத்து பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது மார்க்க வழிகாட்டியான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், பகவத்கீதை போன்ற பொக்கிஸஹ்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது இறைத்தூதர்கள், கடவுள்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், அதன் மரணித்த தலைவர்களின் ஒசியத்துக்களையும், கட்சியின் சின்னங்களையும், கட்சியின் கீதங்களையும் பின்பற்றுகிறார்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும், அதன் உயர்பீட உறுப்பினர்களும், அதன் வேட்பாளர்களும் பல மாயாஜால வித்தைகளையும், பல நாடகங்களையும், பல திரைப்படங்களையும், பல புராணக் கதைகளையும் அரங்கேற்றுகிரார்கள். அவர்கள் தேர்தல் மேடையில் போடும் வேடங்களும், மக்கள் முன்னிலையில் செய்யும் சத்தியங்களும் மக்களின் வாழ்வில் பால் வார்ப்பதைப் போல் தோன்றுகிறது. 'அது வெறும் கானல் நீராகவே அமைகின்றது'.

மக்கள் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளத் துடிப்போடு உள்ள அரசியல் கட்சி, தங்களால் அல்லது தங்கள் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்னெடுக்கப்படவிருக்கும் கடந்து கால, நிகழ் கால அல்லது எதிர்கால திட்டங்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்யும். அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பார்த்தோமானால் மக்கள் சனத்திறல் இல்லை. வெறச்சோடிப் போயிருக்கும். 

ஒரு சில கட்சிகள் சமகால அரசியலுக்கு சாதகமான வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை அமைத்துக் கொள்ளும். அவர்கள் பிரச்சாரத்தில் சமகால பிரச்சினைகளைப் பற்றி அக்குவேரையாக ஆணி வேரையாக மக்களுக்கு விளங்கப்படுத்துவார்கள். சனத் தொகை மடைதிறன்ட வெள்ளம் போல் காட்சி அழிக்கும், கடைசியில் பார்த்தால் கட்சி தேர்தலில் வெற்றியடைந்திருக்கும், நமது சம்மாந்துறை மண்ணும், மக்களும் கைசேதமடைந்திருப்பார்கள்.

கடந்த காலங்களில் நாம் விட்ட தவறின் மூலம் இளக்கப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு எதிர் காலத்தில் மீட்டெடுப்பது என்பதில் இன்னும் மக்கள் தெளிவடையவும் வில்லை. அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், கல்விமான்களும் தெளிவுபடுத்தவும் இல்லை. சம காலத்தில் சேற்றில் முளைத்த காலானைப் போல் இன்று புது புது தலைவர்கள் முளைத்துவிட்டார்கள். அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்படுவது, உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் இருந்து உயர்வடைவோம் என்றல்ல, அவர்கள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் என்றும் மந்திரி சபையில் மந்திரி என்றும், அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சரக்கு கடையில் கிடக்கும் பருப்பு என நினைத்துள்ளார்கள். இன்று நமது மண்ணின் அரசியல் பணம் படைத்தவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட ஒரு பொருளாக மாரிவிட்டது. அரசியலுக்கு வருவது என்றால் பணம் படைத்தவன் மட்டும் தான் வர வேண்டும் என்ற மன நிலை மக்கள் மத்தியில் மாற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் பிறந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் நுழையும் உரிமை உண்டு. 'ஒவ்வொரு இளைஞனும் உங்களை நீங்கள் இந்த சமூகத்தின் தலைவராக வருவதற்து தயாராக வேண்டும், அதற்கு பணமோ! குழமோ! தடையல்ல...'

இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அவதானித்து பார்த்தீர்களானால் அரசியல் தலைவர்களிடம் கொள்கை இல்லை... கொள்கை இருப்பவர்களிடம் மக்கள் இல்லை... அது தான் இன்றைய சம்மாந்துறையின் அரசியல் நிலை.

சமகாலத்தில் ஒரு அரசியல் கட்சியில் உள்ள நபர் கட்சியில் உள்ள போது கட்சியை வாழ்த்துகிறார், கட்சியின் கொள்கையை பரப்புகிறார், கட்சியின் தலைமையை புகழ்கின்றார், இதே நேரத்தில் தேர்தல் ஒன்று குரிக்கிடுகிறது. அத் தேர்தளில் அக் கட்சி அந் நபருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வில்லை... அப்பொழுது அவரது அறிக்கை மாறுகிறது. அவரது நாக்கு தடம் புறழ்கிறது... அச் சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் வாழ்த்திப் பேசிய கட்சியை தூற்றியும், கடந்த காலத்தில் தூற்றியும், தூசித்தும் பேசிய காட்சியை வாழ்த்தியும் பேச ஆரம்பிக்கின்றார் 'இது தான் சந்தர்ப்ப வாத அரசியல் வாதியின் நிலை'

நாம் எவ்வாறான சரியான பிரதிநிதியை சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் தெரிவு செய்ய வேண்டும்?

1. ஒழுக்கம் மற்றும் மார்க்க விழுவியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. சந்தர்ப்பவாத அரசியலை செய்யாதவராக இருக்க வேண்டும்.
3. நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டி, சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் 'நல்லாட்சி' யை உருவாக்குபவராக இருக்க வேண்டும்.
4. மக்களிடம் அன்பாகவும், பன்பாகவும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும்.
5. சம்மாந்துறை மண்ணினதும், மக்களினதும் நலனில் தூரநோக்கு சிந்தனையோடு செயல்படுவராக இருக்க வேண்டும்.
6. தேர்தல் காலங்களில், நாம் பெற்றெடுத்த இளைஞர்களை பிழையான வழியில் நடத்தாதவராக இருக்க வேண்டும்.
7. கடந்த கால தேர்தல்களில் நமக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியவராக இருக்க வேண்டும்.
8. இலஞ்சம் மற்று ஊழல்களில் ஈடுபடாதவராகவும், அதனை விரும்பாதவராகவும் இருக்க வேண்டும்.
9. எச் சந்தர்பத்திலும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

போன்ற நற்குணங்களை உடைய ஒரு மனிதனை, நமது மண்ணில் தெரிவு செய்வதன் மூலம் தான், சிறந்த அரசியல், கலாசார, பண்பாடுகளை நமது சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் கொடுக்க முடியும்.

Thursday, October 30, 2014

Sunday, October 26, 2014

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e~paper Section திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் Y.M சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.







சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்!

சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e~paper Section திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் Y.M சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.